சென்னை, ஜூன் 25- நியாயவிலைக் கடையில் மண்ணெண்ணையை அனைவருக்கும் முறையாக வழங்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் மண்டலம், அமுதம் சில்லரை அங்காடி அம்பேத்கர் நகரில் உள்ளது. இந்த அங்காடியில் மொத்தம் 876 குடும்ப அட்டைகள் உள்ளன. கடைக்கு 850 லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே வழங்கப் படுகிறது. இதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மண்ணெண்ணை கிடைப்பதில்லை என கூறுகிறார்கள். இது குறித்து அம்பேத்கர் நகர பெண்கள் கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் கடையை மூடிவிட்டு சென்று விட்டார். இதனால் ஆவேச மடைந்த பெண்கள் கடை முன்னால் அமர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாதர் சங்கத் தலைவர்களிடம் பேசி மண்ணெண்ணை அளவை உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். இப்போராட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், கிளைத் தலைவர் கலிதா பேகம், பகுதிச் செயலாளர் ஆறு முகலஷ்மி, பொருளாளர் புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.