கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், செப்டம்பர் 18-ஆம் தேதி மீண்டும் விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று காஞ்சீபுரத்தில் மு.க.ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்குக் கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும். நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும்." என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.