சென்னை, ஏப்.14-
2015 - 16 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத் திற்கு வழங்கப்பட வேண்டிய மத்திய தொகுப்பு நிதியான ஆயிரத்து 321 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுடன் காணொளிக் காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழகத்திற்கு தேவையான ஏப்ரல், மே மாதத்திற்கான அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.