tamilnadu

மடிக்கணினி கோரி மறியல்

வேலூர், ஜூலை 3- திருப்பத்தூரில் உள்ள மேரி இமாகுலேட்  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் இதே  பள்ளியில் தொழிற்கல்வி பாடம் படிக்கும் 49 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதனால் மடிக்கணினி கிடைக்காத  மாணவிகள், அவர்களது பெற்றோருடன் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருப்பத்தூர் காவல் துறையினர் மாணவி களை சமாதானம் செய்தனர். பின்னர் அனை வரும் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் மாவட்டக் கல்வி அலுவலர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது  “இந்த பள்ளி அரசு நிதியுதவி பெறும் பள்ளி யாக இருந்தாலும் நீங்கள் எடுத்திருக்கும் பாடப்பிரிவுக்கு பள்ளி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தி வருகிறது. இப்போதைய சூழ்நிலையில் அரசு மூலம்  இந்த பிரிவுக்கு மடிக்கணினி வழங்க முடியாத  நிலை உள்ளது. எனினும் உங்களது கோரிக்  கையை அரசுக்கு தெரிவிக்கிறோம். உங்க ளுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி வந்  தால் உடனடியாக தருகிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர். அதேபோல் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம்  மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த  சுமார் 300 மாணவர்களுக்கு மடிக்கணினி இது வரை வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த  முன்னாள் மாணவர்கள் தங்களுக்கும் மடிக் கணினி வழங்கக்கோரி திடீரென அங்கு வந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாக மும், ஆம்பூர் காவல்துறையினரும் மாணவர்  களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.