tamilnadu

மலேசியாவில் தவிக்கும் மகனை அரசு மீட்க பெற்றோர் வேண்டுகோள்

விழுப்புரம், ஜூன் 2- மலேசியாவில் தவிக்கும் மகனை மீட்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட கணபதிபட்டு கிராமத்தில் வசிப்பவர் ஞானசேகரன் (42). இவரது மனைவி கீதா. இவர்களது மகன் சக்திவேல் (22). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சக்திவேல் மலேசியாவில் வேலைக்கு சென்றார். தற்பொழுது அங்கு கொரோனா நோய் பரவல் காரணமாக  வேலை பறிபோய் வருமானம் இன்றி கஷ்டப்படுவதாகவும்,  அவரை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.