திருவொற்றியூர், ஜூன் 25- தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் வீடுகளை சூழ்ந்திருப்பதால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். திருவொற்றியூர் பழைய எம்ஜிஆர் நக ரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கழிவு நீர் வாய்க்கா லில், கடந்த 15 நாட்களாக தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் கலக்கப்படுகிறது. இத னால் கழிவு நீர் பொங்கி குடியிருப்புகளை சூழ்ந்து கொள்கின்றன. எண்ணெய்க் கழிவு கள் சுவர், சாலை போன்றவற்றில் ஒட்டிக் கொள்கின்றன. மேலும், குடிநீர் குழாய், நடைபாதை போன்றவற்றில் எண்ணெய் பிசுப்புகள் இருப்பதால் மக்கள் வழுக்கி விழுந்து காய மடைகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதி காரிகள் கவனித்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.