tamilnadu

img

நெய்வேலி கார்த்திகேயன் காலமானார்

கடலூர், மே 20-மார்க்சிஸ்ட் கட்சியின் துடிப்புமிக்க தோழர் நெய்வேலி எஸ.கார்த்திகேயன் காலமானார். அவருக்கு வயது 47.மார்க்சிஸ்ட் கட்சியின் நெய்வேலி ஏரியா கமிட்டி உறுப்பினரான தோழர் எஸ்.கார்த்திகேயன், இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற் பட்டது.நெய்வேலி கூட்டுறவு நாணயச் சங்கத்தின் இயக்குநராகவும், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினராகவும், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும், நெய்வேலி சிஐடியு சங் கத்தின் துணைத் தலைவராகவும் துடிப்புடன் பணியாற்றியவர்.அவரது மரணம் மார்க் சிஸ்ட் கட்சிக்கும், தொழிற் சங்கத்திற்கும் பெரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.கார்த்திகேயனின் மறைவுக்கு வீர வணக்கத்தையும், ஆழ்ந்த அஞ்சலியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. அவருடைய குடும்பத்தினர் கேரளா சென்றிருப்பதால் கார்த்திகேயனின் உடல் நெய்வேலி அரசு பொது மருத்துவமனையில் உடற் கூறு ஆய்வுக்காக வைக்கப் பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வந்ததும் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும்.கார்த்திகேயன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு, நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன், நெய் வேலி சிஐடியு சங்கத்தின் தலைவர் ஏ.வேல்முருகன், பொதுச் செயலாளர் டி.ஜெயராமன் , அலுவலக செயலாளர் ஜி.குப்புசாமி, பொருளாளர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் சங்கிலி பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட தலைவர்கள் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.