மதிப்பெண் சான்றிதழ்
கடலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.
எச்சரிக்கை
புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் தள்ளிப்போய் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
கொரோனா ஆய்வகம்
பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ள வசதியாக கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கோரிக்கை
பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்காக செல்லும் மாணவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம்கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.