tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு ;புதுவை மாணவர்கள்  தேர்ச்சி கடந்த ஆண்டைவிட 3% சரிவு

புதுச்சேரி, ஜூன் 15-  நீட் நுழைவுத் தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் தேர்ச்சி சரிந்துள்ளது. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளது. எம்பிபிஎஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்பு டைய படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 4-ம் தேதி நாடு முழுவதும் 5 ஆயிரத்து 453 மையங்களில் நடந்தது. மொத்தம் 22.7 லட்சம் மாண வர்கள் எழுதினர். புதுவையில் 8 மையங்கள், காரைக் காலில் இரண்டு, மாஹே மற்றும் ஏனாமில் தலா ஒன்று என மொத்தம் 10 மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5 ஆயி ரத்து 266 மாணவர்களில் 5 ஆயிரத்து 149 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வின் முடிவு அன்மையில் வெளி யானது. அதில், புதுவை மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்து 639 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 51.25 ஆகும். மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அளவில் தனியார் பள்ளி மாணவர் பிரசாந்த் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 127-வது இடத்தை பிடித்துள்ளார். 2024-ம் ஆண்டு நீட் தேர்வில் புதுவை மாநிலம் 54.34 சத வீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 51.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3.09 சதவீதம் குறைந்துள்ளது.