குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எண்ணூர் அசோக் லேலண்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தவமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை விளக்கிப்பேசினார்.இடைக் கமிட்டி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.