சென்னை:
சென்னையில் கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கே நேரில் சென்று குறைந்த விலையில் உணவுவழங்க நடமாடும் 3 அம்மா உணவகங்களை முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 27 லட்சம் மதிப் பிலான 3 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர் கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், பென்ஜமீன், தலைமை செயலாளர் சண் முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 3 வாகனங்கள்மூலம், அம்மா உணவகங்க ளில் தயாரிக்கப்பட்ட தரமான உணவுகள் கட்டிடதொழிலாளர்களுக்கு நேரில் வழங்கப் பட இருக்கிறது.