சென்னை,செப்.7- தமிழை புறக்கணிக்கும் ரயில்வே வாரியத்தை கண்டித்து தெற்கு ரயில்வே அலுவலகத்தை கனிமொழி தலைமையில் திமுகவினர் முற்றுகையிட்டனர். ரயில்வே துறை ஊழியர்க ளுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொது போட்டித் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நூறு சதவீதம் ‘அப்ஜெக்டிவ்’ கேள்விகள் அடங்கிய இந்த தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டியதில்லை. இதற்காக உரிமை கோரவும் முடியாது என்று ரயில்வே தேர்வு வாரியம் கூறிவிட்டது. இதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, காலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோ கலந்துகொண்டனர்.