tamilnadu

கொடைக்கானல் விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை, ஜூலை 12- தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜூலை 12) கேள்வி நேரத்திற்கு பேசிய திமுக உறுப்பினர் செந்தில்குமார், “கோடைக்கானல் நகரப் பகுதி களில் இருக்கும் குடியிருப்புகள்,  விடுதிகள், வர்த்தக நிறுவனங்க ளுக்கு புதிய முழுமை திட்டம்  ஒன்று அரசு சார்பில் அறிமுகப்ப டுத்தப்பட்டது. அந்த திட்டத்தின்  வரைப்படத்திற்கும், நகராட்சி யின் பட்டியலுக்கும் பிரிக்கப்பட்டி ருக்கும் மண்டலங்களுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. எனவே, அந்த மக்களின் உணர்வு களை முழுமையாக அறிந்து இந்த  திட்டம் மக்களுக்கு எளிய வகை யில் பயன்படக் கூடிய வகையில்  புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றும் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக 306 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை  மறு ஆய்வு செய்து விதிமுறை களுக்குட்பட்டு வரன்முறைப் படுத்த வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த துணை  முதலமைச்சர் ஓ. பன்னீர்செல் வம்,“ கொடைக்கானல் முதலாம் முழு முதன்மைத் திட்டம் மூலம்  நகர்ப் புறத்தில் சில கட்டடங்கள் மீது  விதிமுறை மீறியதாக நடவ டிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் 2004 ஆம் ஆண்டில் கொடைக்கானல் முதன்மைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டது” என்றார். மறு ஆய்வு முழுமைத் திட்டம் உருவாக்கப்பட்டு 1496 கட்டடங் கள் விதிமுறை மீறியதாக கண்ட றியப்பட்டுள்ளது. இந்த ஆய்வ றிக்கை நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு, உயர்நீதிமன்ற உத்தரவைத் பெற்றபின்னர் மறுஆய்வு முழுமைத் திட்டம் மூலம் வரையறை செய்யப்படும் என்றும் கூறினார். கொடைக்கானல் மறு ஆய்வு  முழுமை திட்டத்தின் கீழ் அனுமதி  பெறாமல் இருக்கும் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.