சென்னை, ஜூலை 2- கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுந்தரவேல் சிங்கப்பூ ரில் மேஸ்திரியாக பணியாற்றினார். கொரோனா பொது முடக்கத்தால் கடந்த 25ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை தேனாம்பேட் டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த 2 நாட்களாக சுந்தரவேல் தொலைபேசியை எடுக்காததால், அவரது மனைவி நட்சத்திர விடுதியை தொடர்பு கொண்டார். அதன் பிறகே, விடுதி ஊழியர்கள் சுந்தரவேலின் அறையை சோதனை யிட்டதில், அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக காவல்துறை யினர் அனுப்பி வைத்தனர். மேலும் அவர், மாரடைப்பால் உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர்.