tamilnadu

சர்வதேச பொறியியல் கண்காட்சி கோவையில் மார்ச் 4ல் தொடக்கம்

சென்னை,மார்ச்.1- பொறியியல் சாதனங்களை காட்சிப்படு த்தும் மற்றும் சந்தைப்படுத்தும் சர்வதேச கண்காட்சி கோவையில் வரும் மார்ச் 4 ஆம்தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில் நடை பெறவுள்ள  இந்த கண்காட்சியை மத்திய அரசின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி) தமிழக அரசின் ஆதரவோடு நடத்துகிறது. தமிழ கத்தில் இருந்து 125 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. மேற்குவங்கம், ஹரியானா, கர்நாடகம் உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ரஷ்யா, மலேசியா, ஆஸ்திரேலியா,ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன. இதனை  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக அரசின் சிறு,குறு நடுத்தர  தொழில் துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்த கண்காட்சியில் ஸ்டால் அமைக்க 80விழுக்காடு மானியம் வழங்கப்படும் என்று இஇபிசி  தலைவர் ரவி செஹ்கால் தெரிவித்தார். இந்த கண்காட்சி க்கு நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக  பெல்ஜியம் வர்த்தகம்  மற்றும் முதலீடு ஆணையர் ஜெயந்த் நாடிகர் கூறினார்.