tamilnadu

img

கொரோனா தாக்கம் தமிழக விமான  நிலையங்களில் தீவிர பரிசோதனை

சென்னை, மார்ச் 15- கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள் ளப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறுகை யில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை.  கேரளா வந்த விமானத்தில் பயணித்த தமிழர்களின் தகவல்கள் அனைத்தும் எங்களி டம் உள்ளன என்று தெரிவித்தார்.