tamilnadu

img

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து  இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

2017- 18, 19 ஆம் கல்வியாண்டில்  12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து  இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செவ்வாயன்று (ஆக 13)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், செயலாளர்கள் இசக்கிநாகராஜ், சந்துரு, நிர்வாகிகள் சண்முகம், அனிதா, தீபா, சீனிவாசன், மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.