சென்னை, மே 25-மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்துவரும் நிலையில், தங்களுக்கு ஒருஎம்பியை கூட தராத மாநிலமாக இருந்தாலும் தமிழக பாஜகவுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைத் தருவது என்று முடிவு செய்துள்ளதாம் பாஜக மேலிடம். இதற்கிடையே பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியைத் தழுவியவருமான எச்.ராஜா அவசரமாக வெள்ளியன்று தில்லி சென்றார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே , ‘இந்த முறை பாஜகஆட்சி அமைத்தால், நான் ஜெயித்தால்வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பதவி உறுதி’ என்று தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தாராம் எச்.ராஜா. இந்நிலையில் ராஜாவின் தில்லி பயணத்தின் மூலம் புதிய அமைச்சரவையில் தமிழக பாஜகவின் பிரதிநிதியாகஅவர் இருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.ராஜா மத்திய அமைச்சரானால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஆதரவோடு தமிழ்நாட்டில் இருந்தே அவர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.