tamilnadu

ரூ.5000 கோடியில் எரிவாயு மின்நிலையங்கள்

சென்னை,ஜூலை 8- அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும்  வகையிலும் மின் கட்டமைப்பு மேலும் பல ஆண்டுகள்  வலுவாக இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறன்  உள்ள இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழ லும் மின் நிலையங்கள் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பேரவையில் திங்களன்று விதி 110-ன் கீழ் அவர்  வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:  5 அனல் மின் நிலையங்களில் இருந்து வெளி  யேறும் கழிவுகள் மற்றும் தூசிகள் காற்றில் கலப்பதைக்  கட்டுப்படுத்த ரூ.3000 கோடியில் புதிய உபகரணங்கள்  நிறுவப்படும். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்  கம், நாமக்கல் மாவட்டம் நல்லூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய 3 இடங்களில் 230 கிலோ  வோல்ட் புதிய துணை மின் நிலையங்கள் 110 கோடி யில் இந்த ஆண்டு அமைக்கப்படும். மின் கட்டமைப்பை  வலுப்படுத்தும் 47 இடங்களில் ரூ.380 கோடி செல வில் புதிதாக 33/ 11 கிலோ வோல்ட் துணை மின் நிலை யங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தில் உள்ள 750 உதவியாளர் காலிப் பணியிடங் கள் நிரப்பப்படும். மேலும் இந்த நிதி ஆண்டில் இருந்து  இயக்கப்பட இருக்கும் வடசென்னை அனல் மின் நிலை யம் நிலை 3 க்காக 150 உதவி பொறியாளர் பதவிகள் உரு வாக்கப்பட்டு நேரடி பணி நியமனம் நிரப்பப்படும்.