tamilnadu

img

தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில்  2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்...

சென்னை
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சில இடங்களில் வெப்பச்சலனம் காரணம் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், மதுரை, கரூர், திருச்சி, சேலம், தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வெயில் கொளுத்தும்  எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  நீலகிரி,கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 

;