tamilnadu

img

சிங்காரத் தோப்பில் கண் மருத்துவ முகாம்

சிங்காரத் தோப்பில் கண் மருத்துவ முகாம்

கடலூர், ஜூன் 15- கடலூர் அருகே சிங்காரத்தோப்பில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் முதுநகர் சிங்கார தோப்பில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சிறப்பு கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் சட்டமன்ற உறுப்பி னர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதை யடுத்து பொதுமக்களுக்கு கண்பரி சோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் டாக்டர் பிரவீன் ஐயப்பன், கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.