tamilnadu

img

வறட்சி நிவாரணம்-மக்காச்சோளத்திற்கு இழப்பீடு வழங்குக! வருவாய்த்துறை அமைச்சரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 20-  மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கு இழப்பீடு வழங்க அர சாணை வெளியிடக் கோரியும், வறட்சி  பாதிப்பு - குடிதண்ணீர் பற்றாக்குறை போக்கிடவும் வறட்சி நிவாரணம் அறி விக்க வேண்டியும் தமிழ்நாடு வரு வாய்த்துறை அமைச்சரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சந்தித்தனர்.  தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏக்கர் மக்காச்சோளப் பயிரில் அமெ ரிக்க படைப்புழு தாக்கி பல லட்சக்க ணக்கான விவசாயிகள் பெரும் இழப்  பிற்கு ஆளாகினர். இந்த பெரும்  பாதிப்பு குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லும் வகையில்  பெரம்பலூர், விருதுநகர், திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய  மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் முன் முயற்சியில் விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மக்காச் சோள பாதிப்பிற்கு நஞ்சைக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10500 ம்,  மானாவாரிக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு  ரூ.7410ம் வழங்குவதாக சட்டப்பேர வையில் வருவாய்த் துறை அமைச்  சர் உதயகுமார் அறிவித்தார். ஆனால்,  இன்றுவரை அந்த இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அரசாணை வெளி யிடப்படவில்லை. இது விவசாயிகளை மிகப்பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. படைப்புழு தாக்குதலால் பாதிக்  கப்பட்ட அனைத்து மக்காச்சோள விவ சாயிகளுக்கும் அரசு அறிவித்ததன் அடிப்படையில் உடனடியாக இழப்பீடு  கிடைக்க அமைச்சர் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட் டங்களில் கடந்த ஆண்டு மழை குறை வாக பெய்துள்ளது. இதுகுறித்து மார்ச் 21 ஆம் தேதி வருவாய்த்துறை செயலாளர் 24 மாவட்டங்கள் மற்றும்  7 வட்டங்கள் நீரியல் வறட்சி ஏற்பட் டுள்ளதாக அறிவித்தார்கள். மழை குறைந்தும், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ள நிலையில் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு பேரி ழப்பு ஏற்பட்டுள்ளதை தங்கள் கவ னத்திற்கு கொண்டு வருகிறோம். குறிப்  பாக இராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், பெரம்ப லூர், அரியலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை, திண்டுக்கல், புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடு மையான வறட்சி ஏற்பட்டு நெல், கரும்பு, மணிலா, மக்காச்சோளம், சிறுதானியங்கள் முற்றிலும் அழிந்து போயுள்ளது. கடுமையான குடிநீர் பஞ்சம் தமிழகம் முழுவதும் தலை விரித்தாடுகிறது. மக்கள் குடி நீருக்காக அலையும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்சனையிலும் அமைச்சர் உடனே தலையிட்டு, மழை  அளவு குறைந்து நிலத்தடி நீர் மட்ட மும் குறைந்து போயுள்ள அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவா ரணப் பணிகளை உடனடியாக துவங்க  வேண்டும். ஒவ்வொரு பயிரின் உற்  பத்திச் செலவு முழுவதையும் இழப்பீ டாக வழங்க அரசு முன்வர வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற் றுள்ள விவசாயக் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும். குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநிலம் முழு வதும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் மிச்சமிருக்கிற நீர் நிலைகளை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தி  பாது காக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.  இந்த சந்திப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.  டில்லிபாபு, சங்கத் தலைவர்கள் என்.செல்லதுரை, ராமசாமி, ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.