tamilnadu

img

குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், ஜூன் 20- அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த சில வாரங்களாக அந்த பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வியாழனன்று (ஜூன் 20) சாலை மறியல் போராட்டம் நடத்த காலிக் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட வந்தவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அதிகாரிகள் வந்து குடிநீர் விநியோ கத்தை முறைப்படுத்துவதாக உறுதியளித்த னர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் ஆட்டோ சங்கத் தலைவர் சசி, மாதர் சங்க நிர்வாகி கல்பனா, பி.மாரி யப்பன், திருநாவுக்காரசு (சிபிஐ) உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.