மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையம் 1 மற்றும் 2இல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி அலகு 2இன் தலைவர் கே.வெங்கட்டையா தலைமையில் வெள்ளியன்று (அக். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, அலகு 1இன் செயலாளர் சுந்தரம், தலைவர் ஜெயவேல், வெங்கடேசன், ரவி, அஹமத் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.