tamilnadu

img

பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்,  ‘உபா’ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.

;