tamilnadu

img

தெருவிளக்கு கோரி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 15- வட சென்னை திரு வொற்றியூரை யொட்டி யுள்ள விம்கோ ரயில் நிலையத்திலிருந்து சண்முக புரம் செல்லும் வழியில்  தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் இப்பகுதி இருளில் முழ்கியுள்ளது. தெருவிளக்குகள் இல்லா ததை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.  இதனால் வேலை முடித்து வீடு திரும்புவோர் அச்சத்து டன் செல்ல வேண்டியுள்ளது. செயின், மொபைல் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்க ளும் அதிரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். இந்நிலையில், தெரு விளக்குகளை பரா மரிக்க வேண்டும் என வலியு றுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமையன்று (டிச.14) இரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம் பகுதிக்குழு உறுப்பி னர் நாகராஜ் தலைமை தாங்கினார். பகுதிச் செய லாளர் கதிர்வேல், அம்பேத்கர் நகர் கிளைச் செயலாளர் வேலு, ராமநாத புரம் பெண்கள் கிளைச் செயலாளர் அலமேலு உட்படபலர் கலந்து கொண்ட னர்.