ரயில் வண்டிகளையும், ரயில் நிலையங்களையும் தனியார்மயமாக்குவதை கண்டித்து டி.ஆர்.இ.யூ. உள்ளிட்ட கூட்டு போராட்டக் குழு சார்பில் மூர்மார்க்கெட் வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டி.ஆர்.இ.யூ துணைத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ஜானகிராமன், துணை பொதுச் செயலாளர் தமிழரசி, பேபி ஷகிலா,குமரேசன், அரிலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.