பாக்கி பட்டியல், பாலிசி பத்திரங்களை உடனே வழங்க வேண்டும், குழு காப்பீட்டு தொகையை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வயது வரம்பை தளர்த்த வேண்டும், கேரள அரசைப்போல் தமிழகத்திலும் எல்ஐசி முகவர்களுக்கு மாநில அரசு சேமநல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.29) சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) தலைவர் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தாமோதரன் பேசினார்,