tamilnadu

img

அடிப்படை வசதி கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.15- பண்ருட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  செயலா ளர் கே.தனபால் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஒன்றியக் குழு உறுப்பி னர் எஸ்.கே.ஏழுமலை, பி.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.திருஅரசு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பண்ருட்டி நகரச் செயலாளர் உத்தரா பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   பெரியகாட்டு ப்பாளையம் - வேளாங்கு ப்பம் இடையே தார்ச் சாலை அமைக்க வேண்டும், திருவாமூரில் தாழ்த்தப்ப ட்டோர் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், 60 வயதான ஆண், பெண்களுக்கு ஓய்வூ தியம் வழங்க வேண்டும், பண்ருட்டி வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயிர்க் காப்பீட்டு நிதியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், மாளிகம்பட்டு ஊராட்சியில் ஓடை பாலம் பணியை துரிதமாக முடிக்க வேண்டும், நத்தம் கிராமத்தில் ஏரி ஆக்கிர மிப்புகளை அகற்றி குடி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இறுதி யில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் பாண்டி யனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்ப ட்டது.

;