மோடி அரசின் மக்கள்விரோத கொள்கைகளை விளக்கி திருவள்ளூர் மாவட்டத்தில் சிபிஎம் பிரச்சாரம்
திருவள்ளூர், ஜூன் 15- பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை வழங்காத ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ஞாயிறன்று (ஜூன் 15), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். பூந்தமல்லி பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும், மழை காலங்களில் உபரி நீரை வெளியேற்ற கால்வாய் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர், கன்னிகா புரம், மின்சார வாரிய அலுவலகம் ஆகிய பகுதிகளில் கட்சியின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள் தலைமை தாங்கி னார். இதில் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.மோகனா, மாவட்ட குழு உறுப்பினர் கி.பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் மீஞ்சூர் நகரத்தில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் துவக்கிய பிரச்சாரம் லட்சுமிபுரம், பிடிஓ அலுவலக பகுதி, கே.ஜி.எஸ்.நகர், ஷெட்டி நகர், பச்சையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய மற்றும் மாநில அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் இ.ஜெயவேலு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சோழவரம் சோழவரம் ஒன்றியத்தில் ஆயி ரக்கணக்கான சாதாரண மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கை களை வலியுறுத்தி அலமாதி, ஞாயிறு, பாடியநல்லூர், அருமந்தை, சோழவரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், ஒன்றிய செயலாளர் அ.து.கோதண்டன், இ.ரவி, பி.நடேசன், நட்ராஜ், தேவராஜ், செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் திருவள்ளூர் அருகில் உள்ள பேரத்தூர், விஷ்ணுவாக்கம், கரிகல வாக்கம், விளாப்பாக்கம், மெய்யூர், தேவந்தவாக்கம், எறையூர், மைலாப்பூர், சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். கட்சியின் திரு வள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலை யரசன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.எழிலரசன், என்.கீதா ஆகியோர் பேசினர். மூத்த தோழர் கே.செல்வராஜ் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். பழங்குடி இன மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களுக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும், நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆர்.கே.பேட்டை ஆர் கே பேட்டை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் நூறு நாள் வேலையை உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதற்கு ஆர்.கே.பேட்டை வட்ட குழு உறுப்பினர் குப்பன் தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.தமிழரசு, சி.பெருமாள், வட்ட செய லாளர் சிவ பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.