என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்
புதுச்சேரி, ஜூன் 15 - என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை கண்டித்து மதகடிப்பட்டில் சிபிஎம் சார்பில் ஞாயிறன்று சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது. கிராமப்புற பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை துவங்க வேண்டும். மூடப்பட்டுள்ள லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருபுவனை நூர் பஞ்சாலைகளை திறக்க வேண்டும். தமிழகத்தை போல் விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் அத்தியாவசிய பண்டங்களை உடனே வழங்க வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து புதுச்சேரி முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்கள் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டில் துவங்கிய சைக்கிள் பிரச்சாரத்திற்கு சிபிஎம் மண்ணாடிபட்டு கமிட்டி செயலாளர் ரகு.அன்புமணி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜாங்கம் சைக்கிள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சங்கர், மதிவாணன், கமிட்டி உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, ரகுநாத், சிவசங்கரி, நாகராஜ், கந்தநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து கலித்தீர்த்தாள் குப்பம், சன்னியாசிகுப்பம்,டிபிஜி நகர், திருபுவனை, நல்லூர் ஆகிய பகுதிகளில் சப்தர் ஆஸ்மி கலைக்குழுவின் கிராமிய பாடல்களோடு சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.
ஜூன் 26 நகர விற்பனைக்குழு தேர்தல்: அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை, ஜூன் 15 - சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு படுத்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நகர விற்பனைக்குழு அமைப்பதற்கான தேர்தல் ஜூன் 26ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், பெருநகர சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் (வடக்கு) பிரவேஷ்குமார், மாநகராட்சி வட்டார துணை ஆணையர்கள் எம்.பி.அமித் (தெற்கு), கே.ஜெ.பிரவீன் குமார் (மத்தியம்), பள்ளிக்கரணை காவல் துறை துணை ஆணையர் ஏ.சி.கார்த்திகேயன், போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சி.சங்கு, தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆணையர் ஜெ.குமரகுருபரன், வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் ஜூன் 16 முதல் வாக்கு எண்ணப்படும் ஜூன் 27ந் தேதி வரை காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகிய இடங்க ளில் குடிநீர், கழிவறை உட்பட போதிய அடிப்படை வசதிகள் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏது வாக வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு மேடை மற்றும் சக்கர நாற்காலி அமைக்கப்பட வேண்டும். வாக்காளர்கள் எந்த மையத்தில் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எளிதில் அறிந்து கொள்ள ஒவ்வொரு மையத்திலும் உதவி மையம் ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவி, நிகழ்வுகள் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள சாலையோர வியாபாரி, வாக்குப்பதிவு செய்யும் முன்பு 2023ம் ஆண்டு மாநகராட்சி வழங்கிய சாலையோர வியாபாரிகள் அடை யாள அட்டை அல்லது புதியதாக சிப் பொருத்திய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இந்த அடையாள அட்டை இல்லை யெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தை காண்பித்தால் வாக்க ளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார், ஒரு வாக்காளர், பதிவு செய்யப்பட்ட மண்டலத்திலிருந்து மற்றொரு மண்ட லத்தில் போட்டியிட்டால், குறிப்பிட்ட அந்த மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரியே முன்மொழிப வராகவும், வழிமொழிபவராகவும் இருக்க வேண்டும். ஒரு சாலையோர வியாபாரி ஏதேனும் ஒரு மண்டலத்தில் ஒரு பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும் என்று கூறினார்.
காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்: 572 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சிபுரம், ஜூன் 15- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூ 8.13 கோடி வழங்கப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வின் உத்தரவின் பேரிலும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல், துவக்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வங்கி வழக்குகள் மொத்தம் 1140 வழக்குகள் எடுக்கப்பட்டு 55 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் ரூ. 31.52 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் எஸ்.மோகன குமாரி, எஸ்.சுஜாதா, அருண் சபாபதி, டி.திரு மால், சந்தியாதேவி, நவின் துரைபாபு, வழக்கறிஞர் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.