tamilnadu

img

ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி....  தனிமையில் தமிழக ஆளுநர்....   

சென்னை 
தமிழக ஆளுநர் மாளிகையான "ராஜ் பவன்" சென்னை கிண்டியில் உள்ளது. அங்கு இதுவரை சிஆர்பிஆப் படை வீரர்கள் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் மாளிகையில் உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் மூன்று நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதனால் தமிழக ஆளுநர் பன்வாரி லாலுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா இல்லை என தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு ஆளுநருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  

;