சென்னை, ஆக. 12- தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகரை கைது செய்யகோரி சமூக ஊடங்களில் #ArrestSVsekar என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வர் ராஜரத்தினம். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் தெரிவித்து ஆன்லைன் வாயிலாக காவல் ஆணையருக்கு மனு ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில், நடிகர் எஸ்.வி.சேகர், யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக் கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலை யில் புதனன்று (ஆக.12) #ArrestSVsekar என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இதனிடையே சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக் குமார், “எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை என்றால் அதனை அரசு நிறைவேற்றும்” என்று கூறினார். பாஜக பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவரும், ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினருமான அடைக்கலராஜ் என்பவர் 2 கிலோ அபின் கடத்தியபோது திருச்சி காவல்துறையினரால் கைது செய்தனர். இதனையொட்டி #அபினுக்குஅரோகரா என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.