திருநெல்வேலி, ஜூலை 7 - நெல்லை மாவட்டம் சேரை ஒன்றியம் காருக்குறிச்சி கிளையில் சாதியத்தை தகர்ப்போம், மனிதத்தை வளர்ப்போம் என்று போராடிய தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவாக உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சி.பி.எம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பகம், ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், வெள்ள பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதேபோல் வீரவநல்லூர் 15,16-வது வார்டு கிளையில் அசோக் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பகம், நிர்வா கிகள் பாலு, சங்கரன், ஆறுமுகம், கணேசன், வைரவன், முருகன், மாரியம்மாள், முத்துச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.