சென்னை,செப். 19- பிளாஸ்டிக் பொருட்கள் சேர்க்காத, பசுமையை வலியுறுத்தி, சுறறுச்சூழல் மாசுவை தவிர்க்கும் வகை யில் ஆடைகளை வடி வமைக்கும்போட்டி மற்றும் அலங்கரா அணிவகுப்பு சென்னையில் நடைபெற்றது. டிரீம்ஸோன் அண்ணாநகர் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியின் மூலமாக ஆடை வடிவமைப்பு படிப்பு முடித்த இளம் கலைஞர்களின்திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியியின் மூலமாக ஆர்வமுள்ள பல இளம் கலைஞர்கள் தங்களது நேர்த்தியான ஆடைகளை வடிவமைத்து இந் த நிகழ்ச்ச்சியில காட்சிப்படுத்தினர். சென்னையில உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் மிகுந்த உற்சாகத்துடன் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். சிறந்த ஆடை வடிவமைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. திரைக்கலைஞர்கள் யாசிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக இதில் கலந்து கொண்டனர்.