tamilnadu

img

2020 ஜனவரியில் சிஐடியு மாநாடு...

ஊழியர் ஓய்வூதியர் சங்கம்), கன்னியப்பன் (பிஎஸ்என்எல்.இ.யு), சி.பி.கிருஷ்ணன் (வங்கி)  உள்ளிட்ட 50பேர் புரவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக்குழுவின் சிறப்புத் தலைவ ராக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தலைவராக அ.சவுந்தரராசன், செயலாளராக ஜி.சுகுமாறன், பொரு ளாளராக மாலதி சிட்டிபாபு உட்பட 1000பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

 தீர்மானங்கள்
100 நாட்கள் திட்டத்தின் கீழ் ரயில்வே தனியார்மயம் குறித்த நாசகர ஆலோசனை களை மத்திய அரசு கைவிடவேண்டும். குறிப்பாக ரயில்வே பணிமனைகள், ரயில் பெட்டிகள், என்ஜின் தயாரிப்பு உட்பட எவற்றையும் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. தமிழக தொழில் வளர்ச்சியில் ஒரு தனித்த அடையாளச் சின்னமாக கடந்த 40 ஆண்டுகளாக சேலம் உருக்காலை விளங்கி வருகிறது.  சுமார் ரூ.5ஆயிரம் கோடி முதலீட்டில், 4ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். மேலும் புதிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவி காலிப்பணியிடங்களை நிரப்பி சேலம் உருக்காலையை லாபகரமான பாதைக்கு இட்டுச்செல்லவேண்டும். பிஎஸ்என்எல் காண்ட்ராக்ட் தொழி லாளர்களுக்கு 6 மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறு வனத்தை தொடர்ந்து  பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

ஆகஸ்ட் 1 முற்றுகை
முறைசாரா தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும். நலவாரிய முத்தரப்புக் குழுக்களில் சிஐடியு பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும். வேறு மாநிலங்களில் உள்ளதுபோல் நலவாரியபணப்பயன்கள் கணிசமாக உயர்த்த வேண்டும்.சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக கொண்டு வரும் முயற்சியை மத்தியஅரசு கைவிடக்கோரி மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ல் மாவட்ட நலவாரிய அலுவலகங்களை முற்றுகையிடுவது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.30 ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவுபெற்ற மத்திய அரசு ஊழியர்களை பணி ஆய்வு செய்து ஆய்வின் முடிவில் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வ ளிப்பது என்று மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. நிறு வனத்தின் உயர்வுக்கு ஊழியர் உழைத்த உழைப்பை கணக்கில் கொள்ளாமல் திறமை மதிப்பீடு என்ற வாய்ப்பை பயன் படுத்தி அரசு விரும்பாத அதிகாரிகள் உட்பட பணி நீக்கம் செய்வதற்கான ஆயுதமாக பயன்படுத்தத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது வெள்ளி டைமலை. எனவே மேற்கண்ட முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்  என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் இந்த கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.