tamilnadu

img

குழந்தைகள் ஆபாச விடியோ: 10 ஆண்டு சிறை: ஏடிஜிபி ரவி

சென்னை,ஜன.5 சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச விடியோவை பதிவேற்றமோ பதிவிறக்கமோ செய்தால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுத்தரப்படும் என  பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரி வித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களை பார்ப்ப வர்கள், பரப்புபவர்கள் குறித்து போலீஸார் சமூக ஊடகப் பிரிவு மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள், பரப்புபவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்ற னர். இதுபோல ஆபாசப் படத்தை அனுப்பிய திருச்சியைச் சேர்ந்த இளைஞர் சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குழந்தை களின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பலருக்கு சமூக வலை தளங்களில் பகிர்ந்த பொள்ளாச்சியில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடை யில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டாபாசுமாடரி (23) என்பவரை கைது செய்த அனைத்து மகளிர் போலீ ஸார், அவரிடம் இருந்த செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி கூறுகையில், குழந்தைகள் ஆபாச விடியோவை வர்த்தக ரீதியாக பதிவேற்றமோ பதிவிறக்கமோ செய்தால் 10 ஆண்டுகள் சிறை பெற்றுத்தரப்படும். மேலும் குழந்தைகள் ஆபாச விடியோ பதிவேற்றம், பதி விறக்கம் தொடர்பாக மேலும் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

;