tamilnadu

img

சென்னை: விஷவாயு தாக்கி 2 பேர் பலி

சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது . அப்போது விஷவாயு தாக்கியதில் நாகராஜ், ஷாயின்ஷா ஆகிய இருவர் உயிரிழந்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர்  உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.