சென்னை, ஜூன் 1-தமிழ்நாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த கொள் கைப்படி தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கை நீடிக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:-தமிழகத்தில் இரு மொழி கொள்கைஇருந்து வருகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த கொள் கைப்படி தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அந்த கொள்கையே தொடரும் என்றார்.கல்வித்துறையில் வியத்தகு மாற்றங் களை ஏற்படுத்தி வருகிறோம். புதிய கல்வி ஆண்டில் 8 வகுப்புகளுக்குப் பாடத் திட்டம் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது. 2 ஆம் வகுப்பு, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட் டங்கள் வகுக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 3 ஆண்டு கொள்கை திட்டத்தை இரண்டே ஆண்டில் செயல்படுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.