சென்னை, அக்.4- கண்டலேறு அணையிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்கும் திட்டம் நிறைவேறக்கூடியதா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி யுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொடுங்கையூரில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழினிசாமி பேசும்போது ஒரு திட்டத்தை அறி வித்துள்ளார். கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரும் கரில்வரிய் அடிக்கடி சேதம் அடைகிறது. அதை தவிர்க்க, கண்டலேறு அணையிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்க ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். இந்த திட்டம் குறித்து முழு விவரம் அறிந்து முதல்வர் பேசினாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனரில், இந்த திட்டம் முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டம் அல்ல. ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை கிருஷ்ணர் தண்ணீரை கெரிண்டு வருவதற்கு பல திட்டங்கள் ஆலோ சிக்கப்பட்டு, இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுதான் கால்வாய் மூலம் நீரைக் கெரிண்டு வருவது என்பது. இந்த திட்டத்துக்கு அன்று ஒப்புதல் கையொப்ப மிட்டது அதிமுக அரசுதான். இந்த திட்டம் நிறை வேறிய பிறகும் குறிப்பாக, கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் அடிக்கடி பழுதடைந்தும், தண்ணீர் சேதாரமும் ஏற்பட்டு வந்தது. இதனால் பூண்டிக்கு வரும் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையை அறிந்த புட்ட பர்த்தி சாய்பாபா சென்னை மக்களுக்குத் தடை யின்றி குடிநீர் கிடைக்க, அவராக முன்வந்து கண்ட லேறு முதல் பூண்டி வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்வதோடு, அதற்காகும் செலவையும் அவரே ஏற்றுக் கொள்ளுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அதிமுக அரசு இந்த திட்டத்தை ஏற்க முடி யாது என்று அறிவித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரியாக இல்லை. எனவே, குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்வது சிரமம். தண்ணீர் சரியாக கிடைக்காது என்பதாகும். இப்பேரிது நான் கேட்பதெல்லாம் கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரி செய்யப்பட்டு விட்டதா என்பதுதான். சத்ய சாய்பாபா சொன்னபோது அதிமுக அரசு ஒத்துபோயிருந்தால், அரசுக்கு பணமும் மிச்சம், திட்ட மும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்கும். 15 ஆண்டுகளாக தட்டுப்பாடின்றி தண்ணீரும் வந்தி ருக்கும். இன்றைய நிலவரப்படி, இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். நல்ல வேட்டை என்று அவர் கூறியுள்ளார்.