சென்னை, மார்ச் 24- கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வித மாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் சோதனை முயற்சியாக டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிக ளில் கிருமி நாசினி தெளிக் கப்பட்டு வருகிறது. இந்நி லையில் மாநிலத்தின் பல்வேறு முக்கிய இடங்க ளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன் ஒருபகுதி யாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் மட்டும் வரக்கூடிய புதிய வளா கத்தில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை யில் நடைபெற்ற இந்த நிகழ் வில் சுகாதாரத்துறை செயலா ளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட் டோர் டிரோன் செயல்பாடு களை கேட்டறிந்தனர். சுமார் 100 அடி வரை உய ரம் செல்லக்கூடிய இந்த டிரோ னில் 10 லிட்டர் கிருமி நாசினி அடைக்கப்பட்டு 10 நிமி டத்திற்குள் தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ஆரம்பித்தால் 15 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த டிரோன் 15 நிமிடத்தில் 3 கி.மீ வரையில் பயணிக்கும் திறன் கொண்டவையாக உள்ளது.