குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு காஞ்சிபுரம்
, ஜூன் 15- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்ததுடன் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பள்ளியில் இடை நின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கப்பட்டது.