tamilnadu

img

பெண் ஆய்வாளர் தூக்குபோட்டு தற்கொலை

விழுப்புரம், ஏப். 21-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவேல். இவரது மனைவி ஜெய்ஹிந்த்தேவி (38). இவர் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று கடலூர்மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலைசெய்து வந்தார்.இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்ததிண்டிவனம் காவல்துறையினர் ஜெய்ஹிந்த்தேவி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;