சென்னை, ஏப்.14-
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 13ம் தேதி மட்டும் 98 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதித்த திண்டுக்கல்லை சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் கரூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று (ஏப்.14) உயிரிழந்து உள்ளார். இதனை கரூர் ஆட்சியர் அன்பழகன் உறுதி செய்துள்ளார். அரசு விதிமுறைகளின்படி அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.