tamilnadu

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 13- ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும் போது, முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.