tamilnadu

img

6 மாதங்களில் ரூ.50,000 கோடி... மத்திய அரசின் புறக்கணிப்பால் கடன் சுமையில் தமிழகம்

சென்னை:
நிதி வழங்கும் விஷயத்தில் மத்திய பாஜக அரசின் புறக்கணிப்பு மற்றும் கைவிரிப்பால் கடந்த 6 மாதங்களில் தமிழக அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்துள்ள தகவல் மூலம்தெரிய வருகிறது. 
மத்திய அரசிடமிருந்து நிதிப் பகிர்வு குறைவான அளவிலேயே கிடைத்து வருகிறது. மேலும் மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காமல் கடன்வாங்கி சமாளித்துக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசுஅலட்சியத்துடன் கைவிரித்து விட்டது. இந்நிலையில் இந்த ஆண்டில் தென் இந்திய மாநிலங்களிலேயே அதிகம் கடன் வாங்கியமாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியிட மிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் தமிழகம் மொத்தம் ரூ.50,000 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிகம் கடன் வாங்கிய இந்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்- செப்டம்பர் வரையில் வாங்கிய ரூ.24,190 கோடி கடனுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு 107 சதவீதம் உயர்வாகும். நடப்பு நிதியாண்டில் ரூ. 59,209 கோடி கடன் வாங்கபட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.மதிப்பிடப்பட்டு இருந்த ரூ.59,209 கோடியில் ரூ. 50,209 கோடியை முதல் 6 மாதத்திலேயே தமிழக அரசு வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.