tamilnadu

img

விபத்தில் மரணமடைந்த தலைமைக்காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் 

சென்னை
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக காவல்துறையினர் இரவு-பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். மாநகர எல்லை, மாவட்ட எல்லை, மாநில எல்லை எனத் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் மக்களை கொரோனவிலிருந்து காக்க போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் லாரி மோதிய விபத்தில் தலைமைக்காவலர் சேட்டு மரணமடைந்தார். 

இந்நிலையில் பணியிலிருந்த பொழுது பலியான காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில்  அரசுப்பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;