சென்னை, மே 19-இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் 16 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரத சாகு,“ இடைத் தேர்தல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.4 தொகுதிகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 939 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இது மிக அதிக பாதுகாப்பாக போடப் பட்டுள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை யையும் எதிர்கொள்ள முடியும். அதோடு மத்திய ஆயுத போலீஸ் படையினர் 1,300 பேரும் வந்திருப்பதாக அவர் கூறினார்.மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. அதுபற்றி அரசியல் கட்சியினரும் புகார் மனு அளித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கைக் காக காத்திருக்கிறோம்.அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள் ளது. அதுபற்றியும் மாவட்ட தேர் தல் அதிகாரியின் அறிக்கை பெற உள்ளோம். அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.பொன்பரப்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதால் கருத்து கூற முடியாது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்னை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்றார்.தபால் வாக்குகள் தொடர் பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவல்துறையினருக்கான தபால் ஓட்டுகள் 100 விழுக்காடு வழங்கப்பட்டு விட்டது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.