சிவகங்கை, ஜூலை 4 - வெள்ளையர்களை விரட்டி யடித்ததில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த காளையார்கோயிலை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என லயன்ஸ் சங்கத்தின் தலைவரும், அன்னை அச்சக உரிமையாளருமான ஜான் பிரிட்டோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஜான் பிரிட்டோ கூறிய தாவது: சிவகங்கை மாவட்டம் காளை யார்கோயில் விடுதலைப் போராட்டத் தில் முக்கிய இடம்பிடித்தது. வெள்ளையர்களை விரட்டி அடித்த தில், மருது சகோதரர்களும், வேலு நாச்சியார் பெண்மணியும் கடுமையாக போரிட்டனர். மருது சகோதரர்களின் கொரில்லா போரைக் கண்டு வெள்ளை யர்கள் மிரண்டனர். வெள்ளையர்கள், மருது சகோதரர் களை கைது செய்ய முடியாமால் திணறி னர். எட்டப்பரின் ஆலோசனையும் வெள்ளையர்களுக்கு கிடைத்தது. இதன்பின்பு, வரலாற்று சிறப்பு மிக்க காளையார்கோயிலை இடித்து தகர்க்க போவதாக வெள்ளையர்கள் அறி வித்தனர். மருது சகோதரர்கள் சரண டையாவிட்டால் கோயிலுக்கு வெடி குண்டு வைத்து தகர்க்க போவாதாக அறிவித்தனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாத வெள்ளையர்கள், இந்த குறுக்குவழியை கையாண்டனர். இந்நிலையில், உயிரை துச்சமென நினைத்து, மருது சகோதரர்கள் சரண் அடைந்தனர். விடுதலைப் போரில் மருது சகோதரர்கள் தூக்கிலேறிய வீர சம்பவம் நடந்த காளையார்கோயிலை சுற்றுலாத் தலமாக்கிட வேண்டும். காளையார்கோயில் வழியாக காரைக்குடி, சிவகங்கை, தொண்டி, பரமக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதி களுக்கு பேருந்து வசதி உள்ளது. காரைக்குடியிலிருந்து காளையார் கோயில் வழியாக பரமக்குடிக்கு இரவு முழுவதும் பேருந்து வசதி உள்ளது. காளையார்கோயில் நகரை முதலில் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் இப்பகுதியின் ஒளி குளம் கண்மாயில் ஊராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டுகிறது. ‘இங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் காவல்துறையில் ஒப்படைக்கப்படுவர்’ என தகவல் பலகை வைத்திருக்கின்றனர். எனவே, காளையார்கோயில் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் குப்பையை ஒழுங்குப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.