tamilnadu

உள்ளாட்சித் தேர்தல்: ஆசிரியர்களின் 97 சதவீத செல்லாத வாக்குகளுக்கு யார் காரணம்?

சிவகங்கை, ஜன.5- தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் கிராம ஊராட்சிகளுக் கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணிய மர்த்தப்பட்டிருந்தனர். இதில் ஊரகப்பகுதி களில் வாக்காளராக உள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்தியிருந்தனர். கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணுகையில் 97 சத வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசி ரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம்:- தபால் வாக்குகள் அளிப்பதில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு நடை முறைகளை தேர்தல் ஆணையம் நடை முறைப்படுத்தி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் அஞ்சல் வாக்குகள் பெரும்பாலா னவை செல்லாததது என அறிவித்தது ஆசி ரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஆசிரியர்களுக்கு கூட தங்கள் வாக்குகளை முறையாக செலுத்தத் தெரிய வில்லை என விமர்சனம் எழுந்ததற்கு முழுக் காரணம் தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர்களையே சாரும். எனக் கூறி யுள்ள அவர், மாவட்டம் முழுவதும் நடந்த பயிற்சி மையங்களில் வெவ்வேறு நடை முறைகள் பின்பற்ற அறிவுறுத்தபட்டதால் வாக்குப்பதிவு அலுவலர்களாகிய ஆசிரி யர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. வாக்களிக்கும் முறை குறித்து தேர்தல் பயிற்சி வகுப்பில் தெளிவாக எடுத்து ரைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி யுள்ளனர். மேலும் இரண்டு கட்ட தேர்தல் களிலும் ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டதால் தபால் வாக்குகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.  ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்கு செலுத்தும் நடைமுறைகள் மாறு வதாலும், நடைமுறைகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஏற்பட்ட மாறு பட்ட கருத்துக்களாலும், முறையான வழி காட்டுதல்களை வழங்கத் தவறியதாலும் பெரும்பாலான வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களே ஏற்க வேண்டும் அதை விடுத்து ஆசிரியர்களுக்கு வாக்கு கள் கூட அளிக்க தெரியவில்லை என்ற கருத்தை பொதுவெளியில் நம்ப வைக்க முயற்சிப்பதையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தேவையற்ற காரணங்களை கூறி அலைகழிப்பதோடு அவர்களை அடிமை கள் போல் நடத்த முயற்சிப்பதை இனி வரும் தேர்தல்களில் கைவிட வேண்டும்.

;